Followers

Monday, October 29, 2012

கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு பாலாபிஷேகம்



மதுரை, அக். 29-

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு இன்று பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்தனர். தேசிய பார்வர்டு பிளாக் தலைவர் பி.டி.அரசக்குமார் தலைமையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்ட முளைப்பாரி, பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.

பின்னர் தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் மாநில அவைத் தலைவர் ராஜபாண்டியன், துணை பொதுச்செயலாளர் நல்லமணி, மாவட்ட நிர்வாகிகள் முத்துராமலிங்கம், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் ஏராளமானோர் தொடர் ஜோதி ஏந்தி வந்தனர்.

இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அகில இந்திய பார்வர்டு பிளாக் தமிழ் மாநிலக்குழு சார்பில் நாளை காலை 9 மணிக்கு மாநில தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சந்தானம் தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது. பின்னர் 100 வாகனங்களில் பசும்பொன் செல்கின்றனர்.

இதனை தொடர்ந்து அரசரடியில் உள்ள மூக்கையா தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இதில் பொதுச் செயலாளர் சுரேந்திரன், பொருளாளர் மகேஸ்வரன், உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். மாலை 4 மணிக்கு சந்தானம் தலைமையில் தமுக்கத்திலிருந்து தேவர் ஜெயந்தி ஊர்வலம் நடக்கிறது. பின்னர் ஜான்சி ராணி பூங்காவில் உள்ள நேதாஜி சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து தெற்குமாசி வீதி-மேல வீதி சந்திப்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது.

No comments:

Post a Comment