Followers

Monday, October 29, 2012

முத்துராமலிங்க தேவரின் 2 ம் நாள் குருபூஜை விழா: ஏராளமானோர் முடி காணிக்கை செலுத்தினர்

முத்துராமலிங்க தேவரின் 2 ம் நாள் குருபூஜை விழா: ஏராளமானோர் முடி காணிக்கை செலுத்தினர்
கமுதி, அக். 29-

முத்துராமலிங்கத் தேவரின் 2-ம் நாள் குருபூஜை விழா இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் முடி காணிக்கை செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவாலயத்தில் நேற்று குருபூஜை விழா தொடங்கியது. 2-ம் நாள் குருபூஜை விழா இன்று காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் தேவரின் அரசியல் வாழ்வு குறித்த கருத்தரங்குகளும் நடைபெற்றது. 2-ம் நாள் குருபூஜை விழாவையொட்டி ஏராளமானோர் முடி காணிக்கை செலுத்தினர். லட்சார்ச்சனை பூஜையும் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஜோதி ஏந்தி வந்தனர். முன்னதாக நேற்று இரவு தேரோட்டமும், திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.

No comments:

Post a Comment