Followers

Monday, November 26, 2012

அடுத்த மாதம் 16 ந்தேதி பரமக்குடியில், கண்டன பொதுக்கூட்டம்: நடிகர் கார்த்திக் அறிவிப்பு

அடுத்த மாதம் 16 ந்தேதி பரமக்குடியில், கண்டன பொதுக்கூட்டம்: நடிகர் கார்த்திக் அறிவிப்பு
மதுரை, நவ. 26-

மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் நாடாளும் மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மதுரை மாவட்ட தலைவர் காசிராஜன் தலைமை தாங்கினார். கட்சியின் நிறுவனத்தலைவர் நடிகர் கார்த்திக் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் குரு பூஜைக்கு சென்று விட்டு திரும்பும்போது 20 பேர் மீது சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசி இருப்பது வேதனை அளிக்கிறது. இது கண்டிக்கத்தக்கதாகும்.

பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காகவே மதுரை வந்தேன். அவர்களை பார்த்தபோது எனது மனம் மிகவும் வருந்தியது. இந்த தாக்குதலை கண்டித்து அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி பரமக்குடியில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும்.

இந்த கூட்டத்தில் தேவர் குருபூஜையின்போது ஏற்பட்ட வன்முறை குறித்தும், நாட்டில் விலைவாசி உயர்வு, மின்வெட்டு போன்ற பொதுமக்களின் பிரச்சினை குறித்து பேசுவேன். நமது கட்சியில் மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். இன்னும் ஓரிரு நாளில் அவர்கள் சென்னைக்கு அழைக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் பாலமுருகன், பூபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment